N95 மாஸ்க் வைரஸை தடுக்குமா? மருத்துவர்கள் கருத்து!

27 April 2021

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது என்பதும் தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் என்ற பெயரில் சாதாரண மாஸ்க் அணிந்தால் தற்போது பயன் அளிக்காது என்றும் தரமான மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் 
 
சாதாரண துணியாலான மாஸ்க் 50 சதவீத கிருமிகளை மட்டுமே தடுக்கும் என்றும் நோய் தொற்று அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் 100 சதவீதம் பாதுகாப்பான மாஸ்குகளை அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக N95 போன்ற மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்றும் இந்த மாஸ்குகல் ரூபாய் 20 க்கு அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்றும் இவ்வகையான மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்கவும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் 
 
இந்த N95 மாஸ்க் ஆனது 95% முகத்தையும் மூக்கையும் மூடிக்கொள்ளும் என்றும் மேலும் டபுள் கிளாத் உள்ளதால் இதனையும் மீறி வைரஸ் உள்ளே செல்வது வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.