தமிழகத்தில் 8 ஆட்சியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

25 October 2020

தமிழ்நாட்டில், 8 ஆட்சியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, பணியிட மாற்றம் செய்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தித்தொடர்புத்துறை இயக்குநரும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின், பொறுப்பு மேலாண் இயக்குநருமான சங்கருக்கு, பதிவுத்துறை ஐ.ஜி பொறுப்பு, கூடுதலாக வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களின் ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக நிர்மல் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின்வழித்தட நிறுவனத்தின் நிதிப்பிரிவு இணை மேலாண் இயக்குநராக, பிரசாந்த் வடநேரே மாற்றப்பட்டுள்ளார்.