திருவாரூர் வடக்கு மாவட்ட வளரும் தமிழகம் கட்சி சார்பில் மாஞ்சோலை படுகொலையில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கம்.

23 July 2021


திருவாரூர் வடக்கு மாவட்ட வளரும் தமிழகம் கட்சி சார்பில் திருவாரூர்  அருகேயுள்ள மணக்கால் ஐயம்பேட்டையில் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை  படுகொலையில் உயிரிழந்த 17 தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

இது குறித்து வளரும் தமிழகம் கட்சி திருவாரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஆரோக்கிய செல்வம் கூறுகையில் கடந்த 1999ஆம் வருடம் ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்க பேரணியாக  செல்லும்போது தாமிரபரணி ஆற்றங்கரையில் பெண்கள்,குழந்தைகள் என மொத்தம் 17 தொழிலாளர்கள் அன்றைய ஆளும் அரசால் படுகொலை செய்யப்பட்டனர். 

இந்த தியாகத்தை போற்றும் வகையில் அவர்களது 22வது நினைவு நாளை முன்னிட்டு வளரும் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் முனைவர் பாலை பட்டாபிராமன் அறிவுறுத்தலின்படி திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது என்று கூறினார். 

இந்நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் அரிஸ்டாட்டில், மாவட்ட இளைஞரணி செயலாளர் அசோக், மாவட்ட மாணவரணி செயலாளர் தினேஷ், ஒன்றிய செயலாளர் முருகானந்தம் நகர தலைவர் பூவரசன், நகர செயலாளர் வெற்றி ஒன்றிய இணைச் செயலாளர் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கி.இரவி
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்