மகாராஷ்டிரா கனமழை : நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி!
23 July 2021
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
மகாராஷ்ர மாநிலம் ராய்காட் அருகே கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.