தொல்.திருமாவளவன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி காவல்நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் புகார் மனு

28 October 2020

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி பம்மல் சங்கர் நகர் காவல்நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் புகார் மனு அளித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் மேலும் சாதிய வன்மத்துடன் இது போன்ற பொய் புகார் அளித்த பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அ.அஸ்வத்தாமன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் நகர செயலாளர் தன்ராஜ் தலைமையில் பம்மல் சங்கர் நகர் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மேலும் புகார் மனுவின் மீது உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்கர் நகர் காவல்நிலைய ஆய்வாளர்
தெரிவித்துள்ளார்.

இதில் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொருளாளர் பம்மல் சுப்பிரமணி, இஸ்லாமிய ஜனநாயக மாவட்ட அமைப்பாளர் நிசார் அகமது, , வழக்கறிஞர் தினேஷ்,செல்வம், அன்சாரி,ஆகியோர் ‌உடனிருந்தனர்.