விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

14 April 2021

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்,  மதுரை மாநாகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .அதன் பின் அவர் செய்தியாளர்களை  சந்தித்தார்.  அப்போது அவர் கொடுத்த பேட்டியின் போது,

சமத்துவம் நிலை நாட்டப்பட வேண்டும்.  அது தான் எங்கள் நோக்கம்.  

தமிழக சட்டசபை தேர்தலுக்கான  மின்னனு வாக்கு பதிவு ,  ஓட்டு எண்ணிக்கையின் போது,  அதிமுக கூட்டணி தில்லு முல்லு செய்ய வாய்ப்பு உள்ளது. 
காரணம் தேர்தலுக்கு முந்தைய கணிப்பு,  மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை யின்படி திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

 ஆனால் தேர்தலுக்கு பின் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்  என அதிமுக வினர் தெரிவித்து வருகின்றனர்.  எங்களுக்கு மோடி உறுதுணையாக உள்ளார் என கூறுகின்றனர்.  

இது எங்களுக்கு சத்தேகத்தை கிளப்பி உள்ளது. ஒட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளது .
இந்தியாவிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை போதுமான அளவு  இருப்பு  வைத்திருக்க வேண்டும்.அதன் பிறகு தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.  

130 வது பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  ஐ.நா. சபையிலும் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஒரே தேசம் ஒரே கோட்பாடு என சனதான சக்திகள் செயல்படுகிறது.  விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் இதற்கு எதிராக போராட வேண்டும்.
தமிழகம்,  புதுச்சேரியில் பாஜக வினர் வேருன்ற பார்க்கிறது.அதை தடுக்க வேண்டும் .

நாங்கள் சிறுபான்மையினரை நம்பி தேர்தலில் நிற்க வில்லை என கூறுகின்றனர்.  ஆனால்  மின்னனு வாக்கு பெட்டி வைத்திருக்க கூடிய இடைபட்ட காலத்தில் தில்லு முல்லு செய்ய வாய்ப்பு உள்ளது என  திருமாவளவன் பேட்டி அளித்தார்.