கருணை கொலை செய்துவிடுங்கள் மகன்களால் கலங்கி நிற்கும் தாய்.....

14 November 2021

மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரத்தில் கருணை  கொலை செய்துவிடுங்கள் 
மகன்களால் கலங்கி நிற்கும் தாய்..... 

90 வயது மூதாட்டி தாயை மழையில் வீட்டை விட்டு விரட்டிய மருமகள்... சொந்த வீடு இருந்தும் தெருவில் வசிக்கும் அவலம்... மகன்களிடம் சாப்பாட்டிற்கு கையேந்தும் துயரம்.! 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சமாதானம் செய்து மகன்களை எச்சரித்து வானாதிராஜபுரம் 
மூத்த மகனிடம் அனுப்பிவைத்தும் 
சில நாட்களுக்கு முன்பு மருமகள்கள் பேச்சை கேட்டு இரு மகனும் தாயை விரட்டியடித்து வீட்டிற்கு பூட்டு போட்டனர். 

உடனடியாக ஆட்சியரும் அதிகாரிகளும் மூதாட்டி தாயின் சொத்தை பிள்ளைகளிடமிருந்து பறிமுதல் செய்தும் நன்றி கெட்ட இரக்கமில்லாதவர்களை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து மூதாட்டி தாயை பாதுகாக்க வேண்டுகிறோம் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.