கேரள தங்க கடத்தல் விவகாரம் : அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி முதலமைச்சர் பதவி விலக போராட்டம்

30 October 2020

கேரள தங்க கடத்தல் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.


கேரள தங்க கடத்தல் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில், மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை, போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.