ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் உருவப்படம் திறப்பு!

24 July 2021


ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கிறார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. ஆளுநர் தலைமையில் நடைபெறும் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் குடியரசு தலைவர், முதலமைச்சர் கலந்துகொள்கின்றனர்; சட்டப்பேரவை செயலகம் மூலம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பணிகள் நடைபெறுகிறது என்று சபாநாயகர் அப்பாவு
தெரிவித்துள்ளார்.