நம்மோடு இருக்கும் இயேசு

13 April 2021

இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.


அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று (ஏசாயா 7:14) முன்னுரைத்து விட்டார். கடவுள் மனித உருவமாய் பிறந்தார். இந்த செயல் கடவுள் மனிதருள் மனிதராய் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாயிருக்கிறது. ஏசாயா 8:8ல் இமானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விலாசத்தை மூடும் என்றான். இது அசீரியா ராஜாவால் ஆகாஷின் நாட்களில் யூதருக்கு வந்த கெடுதியை குறிக்கிறது என்றும், இதன்படி இமானுவேல் பாடனுவிப்பார் என்றும் விளங்கப்பட்டு உள்ளது.


ஆகவே மேசியா வருவாரென்றும், அவர் நமக்காக பாடுபடுவார் என்றும் நம்பி இமானுவேல் ரட்சகர் என்று நினைத்தார்கள். இது சரித்திரம் கூறும் சான்று. ஏசாயா தீர்க்கனால் உரைக்கப்பட்டது. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழ விடாமலும் அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததை போல நம்மோடு இருக்கிறார். (ராஜா 8:57) .


இயேசு என்ற இம்மானுவேல் நம்மோடு இருந்து நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படி தன்னையே இவ்வுலகிற்கு கொடுத்தார். அந்த இமானுவேல் ஆகிய இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக.