ஜப்பானில் அடுத்த ஆண்டு கோடையில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்: பிரதமர் சுகா உறுதி

26 September 2020

ஐநா சபையில் சுகா ஆற்றிய உரையில் மனித குலம் தொற்றுநோயை தோற்கடித்தது என்பதற்குச் சான்றாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த கோடையில் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

பாதுகாப்பான விளையாட்டுப் போட்டிகளுக்கு உலகை வரவேற்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் சுகா கூறியுள்ளார்.

ஆனால் பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்களும், பொதுமக்களும் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் என நினைக்கவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.