இவர்களிடம் இறைவன் ஒருபோதும் பேசமாட்டான்...?

03 October 2020

‘மறுமை நாளில் யாருடனும் இறைவன் பேச மாட்டானா' என தன் சந்தேகத்தை தோழர் ஒருவர் கேட்டார். அதற்கு நாயகம், ஆடையை தரையில் தொடும்படி உடுத்துவதில் பெருமை கொள்பவர், பொய் சாட்சி சொன்னவர் அல்லது பொய் சத்தியம் செய்தவர், மோசமான பொருளை நல்லது என விற்பவர், செய்த தர்மத்தை அடிக்கடி சொல்லி மகிழ்பவர் ஆகியோரை மறுமைநாளில் பார்க்கவோ பேசவோ மாட்டான் என பதிலளித்தார் நாயகம்.