இஸ்லாம் கூறும் தத்துவங்கள்!

12 April 2021

* ஒற்றுமையுடன் இருப்போர் மீது இறைவனின் கருணை இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள்.
* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். பாலத்திலேயே கட்டிடம் கட்டி தங்க விரும்பாதீர்கள்.
* உலக ஆசை பாவங்களின் வேர். அதிகமாக ஆசைப்பட்டால் குருடனாகவும் செவிடனாகவும் மாற நேரிடும்.
* மற்றவர்களுடன் கூட்டாக சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையை கடைப்பிடியுங்கள்.
* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறுகின்றன.
* பொது இடங்களில் நடைபாதைகளில் மரம் நடுங்கள். அனைவரும் அதன் நிழலில் தங்கி இளைப்பாறுவர்.
* நிழல் தரும் மரத்தின் அடியில் அசுத்தம் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தர்ம வழியில் நடப்பதற்கு நிகரானது.
* நல்ல முறையில் வாங்கிய கடனைத் திருப்பித் தருபவன் சிறந்த மனிதன்.
- பொன்மொழிகள்