ஒலிம்பிக் போட்டி: டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்கள்

18 July 2021


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக, டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகளை, டெல்லி விமான நிலைய ஊழியர்கள் உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


ஜப்பானின் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 18 விளையாட்டுகளில் 68 பிரிவில் பங்கேற்கிறது. 71 வீரர்கள், 56 வீராங்கனைகள் என மொத்தம் 127 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்கள், டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு டோக்கியோ புறப்பட்டு சென்றனர். அப்போது, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் டெல்லி விமான நிலைய ஊழியர்கள், வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.