உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் அம்மாநிலத்தில் பதிவாகியுள்ள அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். இதனால், உத்தரபிரதேசத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 23 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 95 ஆயிரத்து 980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 474 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில்க் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 18 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு உத்தரபிரதேசத்தில் நேற்று 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.