உத்தரபிரதேசத்தில் நேற்று ஒரேநாளில் 18,021 பேருக்கு கொரோனா பாதிப்பு

14 April 2021

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் அம்மாநிலத்தில் பதிவாகியுள்ள அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். இதனால், உத்தரபிரதேசத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 23 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 95 ஆயிரத்து 980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 474 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில்க் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 18 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு உத்தரபிரதேசத்தில் நேற்று 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.