மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

13 April 2021

மராட்டிய மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 6,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,91,043 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 65 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, நாக்பூரில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,903 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 3,518 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் நாக்பூரில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,24,078 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது 61,062 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.