மதுரை அலங்காநல்லூர் அருகே கன்று குட்டியை திருடியதாக ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழ வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்: போலீசார் விசாரணை

20 June 2021


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேலபனங்காடி சீதாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் 

இவர் நேற்று முன்தினம் இவர் வீட்டின் அருகே வந்த ஒரு கன்றுக்குட்டியை கோசாகுளம் பகுதியிலுள்ள ஒரு இறைச்சி கடையில் விற்று விட்டதாக தெரிய வருகிறது. 

மேலபனங்காடி சேர்ந்த நாகலட்சுமி என்பவர் கோசாகுளம் அருகே வரும்போது தனது கன்றுக்குட்டி இறைச்சிக் கடையில் கட்டி போட்டு இருப்பதை பார்த்து கடைக்காரரிடம் இந்த கன்றுகுட்டி எப்படி வந்தது என விசாரணை செய்தபோது மேலபனங்காடி ஊரை சேர்ந்த பாண்டி மகன் கண்ணன் என்பவர் தான் இங்கு விற்பனைக்கு கொண்டு வந்தார் என கூறியுள்ளார்.

உடனே நாகலட்சுமி கண்ணன் வீட்டிற்கு சென்று தனது கன்று குட்டியை திருடி விற்றுள்ளாதாக தகராறு செய்துள்ளார். 

பாண்டியும் அவரது மகன் கண்ணனும் கன்றுக்குட்டியை திரும்ப அழைத்து கொண்டு நாகலட்சுமியிடம் ஒப்படைக்க சென்றபோது ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழுந்து வைத்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 இந்த சம்பவம் குறித்து 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.