பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

25 January 2022

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கோட்ட செயலாளர் பாலசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி