கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே 32 வயது இளைஞரின் பிறப்பு உறுப்பு மற்றும் கழுத்து அறுத்து படுகொலை

31 January 2021

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே 32 வயது இளைஞரின் பிறப்பு உறுப்பு மற்றும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



லாலாப்பேட்டை அடுத்த விட்டுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்  (32) இவர்,  கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 10 மாதத்தில் ஒரு  குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், லாலாப்பேட்டை அடுத்த பிள்ளாபாளையம் அருகே கட்டளை மேட்டுவாய்க்கால் கரையோரத்தில் கதிர்வேல் பிறப்புறுப்பு மற்றும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

கதிர்வேல் உடலை கைப்பற்றிய லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக இந்த கொடூர கொலை நடந்தது? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவ இடத்தில், கரூர் காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.