பிரெஞ்ச் ஓபன்
டென்னிஸ் தொடரில், மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை
கிவிட்டோவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
கொரோனா காரணமாக
ஒத்திவைக்கப்பட்ட பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், தற்போது குறைவான ரசிகர்கள் பங்கேற்புடன் பிரான்ஸ் தலைநகர்
பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று
நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் வீராங்கனை இகா ஷியான்டக், அர்ஜெண்டினா வீராங்கனை நடியா
போடோரோஸ்காவை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி
இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு
அரையிறுதியில் நடப்பாண்டில் ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்ற சோபியா ஹெனின், செக் குடியரசின் கிவிட்டோவை
எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அமெரிக்காவின் சோபியா
ஹெனின் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வென்று
இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.