Representational Image
மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மகேஷ்டாலா அடுத்த ராய்ப்பூரில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து நிகழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மகேஷ்டாலா போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.