செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் திறப்பு

21 June 2022

ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் திறக்கப்படுகின்றது.

சென்னை, சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழை மற்றும் நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய உள்ளது.

அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், நேற்று 23. 36 அடியாக இருந்தது. இன்று ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதற்கட்டமாக ஏரியில் இருந்து 250 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.