எந்தெந்த மாநிலங்களில் ஆட்சி மாற்றம்: தேர்தல் முடிவுகள் !
03 May 2021
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடிக்கிறது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அண்டை மாநிலமான கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிக் கட்சி 100 இடங்களில் வெற்றி பெற்றது ஆட்சியை தக்கவைக்கிறது. அங்கு காஙாகிரஸ் கட்சிக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.
அசாம் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சியை தக்கவைக்கிறது
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை என்றை தெரிகிறது. புதிதாக 6 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்
மேற்கு வங்கத்தை பொருத்தவரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு 210 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. ஆனால் முதல்வர் வேட்பாள் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தேல்வியை சந்தித்துள்ளார். இதனால் ஒரு புறம் வெற்றி பெற்றாலும் மறுபுறம் மம்தா முதல்வரால்தில் சில சிக்கல்கள் உள்ளன.
மேற்கு வங்கத்தில் எதிர்கட்சியாக உருவெடுத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி