பம்மலில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்த நாள் விழா

14 April 2021



சட்ட மாமேதை பாரத ரத்னா பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு திராவி முன்னேற்ற கழகத்தின் காஞ்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட துணை செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மணிமாறன் தலைமையில் சென்னை பல்லாவரம் அடுத்த கல்யாணிபுரம் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மறியாதை செலுத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் மாரி சங்கர் மற்றும் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்