SDPI கட்சியின் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

20 February 2021

SDPI கட்சியின் சார்பாக இன்று அரியமங்கலம் மற்றும் உறையூர் ஆகிய பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியமங்கலம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவறும்பூர் தொகுதி தலைவர் இஸ்மாயில் ராஜா தலைமை தாங்கினார். மேலும் அரியமங்கலம் கிளை தலைவர் தமீம் அவர்களும், நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். SDPI கட்சி திருச்சி மாவட்ட தலைவர் இமாம் ஹஸ்ஸான் அவர்களும், தொழிற்சங்க மாவட்ட பொருளாலர் காஜா மற்றும் மகளிர் அமைப்பின் தலைவி முமினா ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனயுரை நிகழ்த்தினார்கள்.