தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்

15 October 2020

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 26ம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.