புனித செபஸ்தியார் ஆலயத்தில் அலங்கார தேர்பவனி

12 April 2021

குடந்தை மறைமாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் பெருவிழா நடைபெற்றது. விழாவை பங்குத்தந்தை பிரான்சிஸ் கொடியேற்றி தொடங்கி வைத்தார். விழாவையொட்டி திருச்சி சமயபுரம் பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.


விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தேர்பவனி பாபநாசம் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கடை வீதி, தெற்கு ராஜவீதி, மேலவீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது.


அதனை தொடர்ந்து கும்பகோணம் குருகுல முதல்வர் அமிர்தசாமி, புனித அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் திருப்பலி, கொடி இ்றக்கம் ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த், இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.