பிகார் : கங்கையில் கரை ஒதுங்கும் சடலங்கள்- நோய் தொற்று பரவும் ஆபாயம்!

11 May 2021

பிகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தின் சௌஸா பகுதியில் உள்ள சௌஸா மயானத்தில் கங்கையின் கரையில் குறைந்தது 250  சடலங்கள் மிதந்து கிடந்தன. உள்ளூர் நிர்வாகம் இதை உறுதிப்படுத்தியது.

ஆனால் உள்ளூர் பத்திரிகையாளர்கள் சடலங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருந்ததைத் தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர்.இறந்த உடல்கள் கங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த உடல்கள் உத்தரபிரதேசத்திலிருந்து மிதந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. அந்தப் பகுதிவாழ் மக்களிடம்  விசாரித்தபோது, இந்தச் சடலங்கள் தங்களுடைய பகுதியைச் சேர்ந்தவை அல்ல என்று உறுதியளிக்கிறார்கள்.

மேலும் நூற்றுக்கணக்கான இறந்த உடல்கள் கரைைைை ஒதுங்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.