கொரோனா பரிசோதனை: 20வது முறையாக செய்துகொண்ட ப்ரீத்தி ஜிந்தா

22 October 2020

பாலிவுட் நடிகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகியுமான ப்ரீத்தி ஜிந்தா 20வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரசு அமீரக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரிலும் வழக்கம் போல ஜொலிக்காமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தற்போது வீறுநடை போட்டு வருகிறது. இந்த அணியின் நிர்வாகியாக உள்ள நடிகை ப்ரீத்தி ஜிந்தா, அமீரகத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்றுள்ள பஞ்சாப் அணிக்கு உற்சாகமூட்டி வருகிறார்.

அமீரகத்தில் உள்ள அவர் அவ்வப்போது கொரோன பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் 20வது முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்ட ப்ரீத்தி ஜிந்தாவை கொரோனா குயின் என நெட்டிசன்கள் அழைக்கின்றனர்.

இந்த நிலையில் துபாய் சென்ற போது கொரோனா பரிசோதனை செய்து 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன் என கூறிய ப்ரீத்தி ஜிந்தா, சுதந்திர பறவையாக இருந்த நான் , 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது கடினமாக உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடர் நடப்பதால் ஒவ்வொரு 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அறையில் இருந்து வெளியே செல்லக்கூடாது, எங்கள் அணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உணவகம் மற்றும் உடற்பயிற்சிகூடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி 6 நாட்கள் தனிமைப்படுப்பத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 
ஆனால் கொரோனாவிற்கு இடையிலும் ஐபிஎல் நடத்தப்படுவதற்காக பிசிசிஐ மற்றும் மருத்துவக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.