தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

14 April 2021

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி அளித்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.  தற்போது பொது முடக்கம் போடும் சூழ்நிலை இல்லை. இரண்டு வாரங்கள் மக்கள் வீட்டிலிருந்து யாரால் வேலை பார்க்க முடியுமோ, அவர்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் அரசு உத்தரவிட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.

தற்போது நோயாளிகளுக்கு தேவையான வெண்டிலேட்டர் உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 81 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

தமிழகத்தில் இதுவரை முக கவசம் போடாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து, ரூ.5.7 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்  என கூறினார்.