இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று

05 April 2021

இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக, நடிகை பூம் பெட்னேகர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதுவரை எனக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. ஆனால், நான் தற்போது நலமுடன் உள்ளேன், நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். எனது மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதைய சூழ்நிலையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நான் மிகக்கவனமாக இருந்தபோதும் எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. முகக்கவசம் அணியுங்கள், தொடர்ந்து கை கழுவுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், உங்கள் பொதுவான நடவடிக்கைகளில் கவனமாக இருங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.