"எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்"

12 May 2021


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து தேவை நெருக்கடி இருந்தால் உடனே அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.


கொரோனாவில் இருந்து தமிழகத்தை காக்க கட்சிகளை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுவோம். கட்சி பாகுபாடின்றி எம்எல்ஏக்கள் பணியாற்ற வேண்டும். 

எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் நோய்தொற்றை தடுக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் என எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.