சீனாவை புரட்டி போடும் வெள்ளம் - புல்டோசரால் மக்களை மீட்கும் முயற்சி

23 July 2021


சீனாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வ‌ருகின்றது. இதனால், பெருக்கெடுத்த்த வெள்ளம், சற்றும் குறையாத நிலையில், மக்களை புல்டோசரின் உதவியுடன் மீட்க முயன்று வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோரை அபாயம் மிகுந்த இடங்களிலிருந்து வெளியேற்றியிருந்தாலும், 33 பேர் வெள்ளத்தால் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதிக்கப்பட்ட ஹெனன் பகுதியை சேர்ந்த 4 நகரங்களுக்கு, சீன வானிலை மையம் சூராவளி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.