பெண்கள் மாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா?
28 January 2021
🔴பெண்கள் மாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா?🔴
(நிரஞ்சனி,கோப்பாய்)
பதில்: நிச்சயமாக உங்களுக்கும் உங்களின் மாதவிடாய்க்கும் இதனால் ஏதும் சிக்கல்களோ பாதிப்போ ஏற்படாது.
மாதவிடாய் முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் குருதிக்கொடையளிப்பதே சிறந்தது.
ஆயினும் தேவை ஏற்படின்
உங்கள் குருதியில்
❌ஈமோக்குளோபினின் அளவு hb:12mg/dl க்கு மேற்பட்டுள்ள சுகதேகியாக இருக்கும் பட்சத்திலும்,
❌உங்களுக்கு அதிக இரத்தப் போக்கு இல்லாவிட்டாலும்,
❌வயிற்று நோ, இதர பிரச்சினைகளேதுமில்லாமல் இருப்பினும் தாராளமாகத் தானம் செய்யலாம். தடையேதுமில்லை.
Written By Dr. Priyaa Kamalasingam
DGH Chilaw, TH Jaffna , Srilanka