கடந்த 3 சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து நாளை முதல் பிக்பாஸ்
நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் குறித்த தகவல்கள்
கடந்த சில நாட்களாகவே வெளியாகி வருகின்றன.
மேலும் கொரோனா அச்சுறுத்தலால்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்து
தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.கடந்த 3 சீசன்களிலும் வார இறுதி நாட்களில்
அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்திப்பார் கமல்ஹாசன்.
அப்போது ஒரு சில
பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த
முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களை படப்பிடிப்பு அரங்குக்குள்
அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிய வருகிறது. அவ்வாறு நடந்தால் ஒவ்வொரு வாரமும்
எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியே கசிய வாய்ப்பே
இல்லை.
நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் போட்டியாளர்கள்
அறிமுகம் செய்யப்படுவார்கள். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் அவர்களுடன்
பிரச்னைகளும் சேர்ந்து கொள்ளும்.இந்த முறை கலந்து கொள்ள உள்ள
போட்டியாளர்கள் யார் என்பதை வைத்தே நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்குமா, இல்லையா என்பதை பார்வையாளர்கள்
தீர்மானித்துவிடுவார்கள்.