பிக்பாஸ் 4 : வீட்டில் இருக்க தகுதி இல்லாத 4 பேர் யார்...யார்?

09 October 2020

பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாத 4 பேரின் பெயரை சம்யுக்தா கார்த்திக் கூற அதில் ஷிவானி, சுரேஷ், ஆஜித், ரம்யா ஆகிய நால்வரின் பெயர் இடம்பிடித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் வழக்கமாக மூன்று ப்ரோமோக்கள் வெளியாகும். அதில் இன்று இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் ஒரு சில முக்கிய காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், கடந்து வந்த பாதை டாஸ்க் இரண்டாவது கட்டத்தில் வீட்டில் இருக்க தகுதி இல்லாத 4 பேரின் பெயரை சம்யுக்தா கார்த்திக் கூற அதில் ஷிவானி, சுரேஷ், ஆஜித், ரம்யா ஆகிய நாள்வரின் பெயரை கூறுகின்றார். அதற்கான காரணமாக மற்றவர்களின் கடந்து வந்த பாதை சோகமாக இருந்ததாக கூறியுள்ளார்.

 முதல் ப்ரோமோவில், கிச்சன் டீமில் சனம் மற்றும் நடிகை ரேகா இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது. சண்டை போடா விருப்பம் இல்லை என கூறும் ரேகா நான் குக்கிங் டீமின் கேப்டன் என கூறுகின்றார். முன்னதாக பிக்பாஸ் வீட்டில் நாமினேஷனின் ஒத்திகை ஒன்று நடந்தது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தனக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட் மற்றும் பிடிக்காதவர்களுக்கு ஹார்ட் ப்ரேக் கொடுக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறினார்.

மேலும் அதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும் என கூறப்பட்டது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஷிவானிக்கு தான் ஹார்ட் ப்ரேக் கொடுத்தனர். ஷிவானி மற்ற போட்டியாளர்களுடன் சரியாக பழகவில்லை, தனியாகவே இருக்கிறார் என்பதையே பெரும்பாலானோர் காரணமாக கூறி இருந்தனர்.