பெகாசஸ் விவகாரம்: அமித்ஷா பதவி விலக வேண்டும் - கே.எஸ்.அழகிரி

21 July 2021

பெகாசஸ் விவகாரத்தில் பொறுப்பேற்றுக் கொண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்‌.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, பெகாசஸ் விவகாரம் பூதாகரமாக இருப்பதாகவும் இதனால் நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.