சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

15 April 2021

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவை சேர்ந்தவர் சினிமா நடிகை ராதா(39). இவர் சுந்தராடிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து விட்டு நடிகை ராதா தனியாக வாழ்ந்து வந்தார்.


இந்நிலையில் கடந்த ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா(44) என்பவருடன் ராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதனையடுத்து எஸ்.ஐ வசந்தராஜாவும், நடிகை ராதாவும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் வசந்தராஜா நடிகை ராதாவுடன்கடந்த ஓராண்டாக சாலிகிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் இடையே கருத்துவேறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் நடிகை ராதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த எஸ்.ஐ ராஜா அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்மையில் ராதாவின் தாயார் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். அவரிடம் வசந்தராஜா ராதாவின் நடத்தை தொடர்பாக புகார் அளித்துள்ளார், ஆனால் ராதாவின் தாய் ராதாவை கண்டிக்காமல் வசந்தராஜாவை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தராஜா ராதாவின் தாயயை அடிக்க முயற்சி செய்ததாகவும் அதனால் வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் எஸ்.ஐ வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையில் வசந்த ராஜா திருவான்மியூரில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பொழுது ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் மேலும் ராதாவுடன் நெருங்கி பழகுவதற்காக திருவான்மியூரில் இருந்து வடபழனி காவல் நிலையத்திற்கு உதவி ஆய்வாளராக பணியிட மாறுதல் பெற்று கொண்டு வந்ததாகவும் தொடர்ந்து ராதாவுடன் சாலிகிராமத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் வசந்தராஜாவும், நடிகை ராதாவும் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ராதா பழைய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை கண்டித்ததாகவும் ஆனால் அதற்கு ராதா முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே தொடர்பில் இருந்த தொழிலதிபர் பைசல் மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பல ஆண் நண்பர்களிடன் தற்போது வரை தொடர்பில் இருப்பதாகவும் அந்த தொடர்புகளை துண்டிக்க சொன்னபோது ராதா மறுத்து விட்டதாலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் நடிகை ராதா தொழிலதிபர் பைசூல், அதிமுக பிரமுகர் உள்ளிட்டவர்கள் மீது புகார் அளித்தும் ராதா மீது பைசுல் தரப்பிலிருந்தும் அதிமுக பிரமுகர் தரப்பிலிருந்தும் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட உதவி ஆய்வாளர் துன்புறுத்துவதாக நடிகை ராதா புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.