வந்தவாசியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகளிடம் ஆலோசனை!

15 April 2021



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மேலும் வந்தவாசி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமதி உஷாராணி, நகராட்சி சுகாதார அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் பேசிய வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி பேசியதாவது: வியாபாரிகள் தங்களின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்து வருதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் எனவும்,  கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள்  கை அலம்புவதற்கு ஏதுவாக வெளியே தண்ணீர் வைக்க வேண்டும் எனவும், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.