கோவை வரிமான வரித்துறை சார்பாக சிறந்த விளையாட்டு வீரர்கள் கவுரவிக்கும் விழா நடைபெற்றது

23 September 2021

கோவை வரிமான வரித்துறை சார்பாக சிறந்த விளையாட்டு வீரர்கள்,உட்பட பல்வேறு துறையில்  சமுதாயத்தில் சிறந்து பங்காற்றியவர்கள்,ஆகியோரை கவுரவிக்கும் விழா நடைபெற்றது.. 

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரி துறை அலுவலகத்தில் பல்வேறு துறையில்  சமுதாயத்தில்  சிறந்த பங்காற்றியவர்களை கௌரவிக்கும்  விழா நடைபெற்றது.கோவை வருமான வரித் துறை தலைமை கமிஷனர் பூபால் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இதில் வருமான வரித்துறை தேர்வாணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாய ஆர்வலர்  பாப்பம்மாள், கோயம்புத்தூர் மண்டல அளவில் அதிக வருமானவரி செலுத்துபவர்கள், வருமானவரித்துறை குடும்ப உறுப்பினர்கள், விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பின் தலைமை உறுப்பினர்கள்  கொளரவிக்கப்பட்டனர்… இந்நிகழ்ச்சியில்,கோவை வருமானவரி துறை கமிஷனர்கள் பிந்து, வேல்ராஜ்,நவீன்குமார்,வேணிராஜ்,அலுவலர் ராம் குமார்,செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகரன் மற்றும் கோவை  வருமானவரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஆணையர்கள், அதிகாரிகள் அலுவலர்கள் என  பலர் கலந்து கொண்டனர்.