நிலம்வாங்கித் தருவதாக கூறிநடிகர்சூரியிடம் 2 கோடியே 70 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகதிரைப்பட தயாரிப்பாளர் உட்பட இருவர்
மீது காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீர தீர சூரன்
படத்தில் நடித்த சூரிக்கு, படத்தின் தயாரிப்பாளர் 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கியை தராமல் இருந்ததாகக்
கூறப்படுகிறது. இந்நிலையில், 2 கோடியே 70 லட்சம் ரூபாயை கொடுத்தால், சம்பளத் தொகையானை 40 லட்சம் ரூபாயைச் சேர்த்து நிலம் வாங்கித் தருவதாகக் கூறி
படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் சூரியை ஏமாற்றியதாகத்
தெரிகிறது.
இதுதொடர்பாக
சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். நடவடிக்கை
எடுக்கப்படாததால் சூரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார். அந்த வழக்கில், நிலமோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம்
உத்தரவிட்டது.
இதனையடுத்து தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர்
மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின்
கீழ் அடையாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.