மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ஏப்ரல் 30 வரை 144 தடை உத்தரவு

14 April 2021

மராட்டிய மாநிலத்தில்  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 30 வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் ஏற்கனவே சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 14 முதல் 30 வரை 144 தடையுத்தரவு பிறக்கப்படுவதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

புதிய வழிகாட்டுதலின்படி அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உணவு, குடிநீர், மின்சாரம் வழங்கல், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகிய இன்றியமையாச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. மளிகை, காய்கறி, பழக் கடைகள், பேக்கரி, பால் பொருட்கள் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.