வந்தவாசியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஆரம்பம்!

16 April 2021

 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியின் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்று முதல் பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கியது. வரும் 23ஆம் தேதி வரை இயற்பியல் வேதியியல் உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. வந்தவாசி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று நடந்தேறியது. இத்தேர்வுகள் அந்தந்த ஆய்வகத்தில் 120 மாணவிகள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து அரசு வழிகாட்டலின் படி பங்கேற்றனர். இந்த செய்முறை தேர்வுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை பெ. பத்மாவதி, உதவி தலைமை ஆசிரியர் எழில் ஆகியோர் பார்வையிட்டனர்.