ஆட்டோவில் தவறவிட்ட 10 சவரன் நகை; உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!!

30 October 2020

திருவண்ணாமலையில் ஆட்டோவில் 10 சவரன் நகையை தவறவிட்ட பெண்ணிடம் காவல்துறையினர் மூலம் நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் . சென்னை மூலக்கடையிலிருந்து ஒரு பெண் உறவினர் திருமணத்திற்காக பேருந்து மூலம் திருவண்ணாமலை வந்துள்ளார். பின்னர் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து, திருவண்ணாமலை, மத்தளங்குளத் தெருவைச் சேர்ந்த வாஹாப்ஜான் மகன் சலீம் என்பவரது ஆட்டோ மூலம் அந்தப் பெண் திருவண்ணாமலை அண்ணா நகருக்கு சென்றுள்ளார். அந்தப்பெண் தனது 10 சவரன் நகையை ஆட்டோவிலேயே விட்டு விட்டு இறங்கி விட்டுள்ளார். பின்னர் அந்த ஆட்டோ டிரைவரும் ஆட்டோவில் நகை இருப்பது தெரியாமல் தனது வீட்டில் சென்று ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று விட்டுள்ளார். தனது நகையை தொலைந்தது தெரிந்து அந்தப் பெண் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் உடனடியாக CCTV கேமராவை ஆய்வு செய்து குறிப்பிட்ட ஆட்டோ டிரைவரின் நண்பரான திருவண்ணாமலை புது வாணியன் குளத் தெருவைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சரவணன் என்பவரின் மூலம் சலீம் என்பவரின் வீட்டுக்குச் சென்று ஆட்டோவில் பார்த்த போது தொலைந்த நகை ஆட்டோவிலேயே இருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் உடனடியாக நகையை மீட்டு அந்த பெண்ணிடம் வழங்கினர். CCTV கேமராவை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நகையை கண்டுபிடிக்க உதவிய காவல் துறையினரையும், நேர்மையாக நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். திருவண்ணாமலை மாவட்டம் செய்தியாளர் VP silambu