"கன்னடர்களை" குறுகச் செய்தவன் "தெலுங்கர்களை" அழியச் செய்த மறைக்கப்பட்ட மன்னன் வரலாறு!

கோப்பெருஞ்சிங்கன்

மறைக்கப்பட்ட வரலாறு:
------------------------------------------

"தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் போற்றிய மாமன்னன்  கோப்பெருஞ்சிங்கன் – வரலாற்றில் மறைக்கப்பட்டது ஏன்?"

----------------- 
800 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் தேசியத்தை கட்டமைத்த மாமன்னன் கோப்பெருஞ்சிங்கன்.முதலாம் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் ஒரு சிற்றரசன் ஆவான். இவனுக்கு வாணிலை கண்ட பெருமாள், மணவாளப் பெருமாள் போன்ற சிறப்புப் பெயர்கள் இருந்தன.

ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. இவனுக்கு 
கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது.
"தமிழ் நாடு காத்த பெருமான்” என்றும், "பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவன்” என்றும், "கன்னடர்களின் தெற்கு பகுதியை குறுகச் செய்தவன்" என்றும், "தெலுங்கர்களை வடக்கிலேயே அழியச் செய்தவன்" என்றும் 800 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளில் போற்றப்பட்ட மன்னன் இவனாகும்.

தமிழைக் காத்தான், தமிழ்நாட்டை காத்தான், தெலுங்கர்களையும் கன்னடர்களையும் தோற்கடித்தான் என்றெல்லாம் – தமிழருக்காக பாடுபட்டான் என்று கல்வெட்டுகளில் நேரடியாகவே குறிப்பிடப்பட்டுள்ளதால் - இந்த மாமன்னன் தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டான்.

"காடவராயர்கள்"

பல்லவப் பேரரசின் முடிவுக்குப் பின்னர், சிதறுண்ட பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் காடவராயர்கள் எனப் பிரிந்து தனக்கென தனித்தனி சிற்றரசுகளை உருவாக்கினர். சம்புவராயர்கள் திருவண்ணாமலை மாவட்டம் படைவீட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர். காடவராயர்கள் விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.

காடவராயர்கள் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 13 ஆம் நூற்றாண்டுவரை (கி.பி.1076 - கி.பி. 1279) வடதமிழ் நாட்டை ஆண்டனர். தெற்கே தஞ்சை, வடக்கே ஆந்திர மாநில கிருஷ்ணாநதி வரை காடவராயர்கள் ஆட்சி செய்தனர்.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தை புதுப்பித்தும், கிழக்கு கோபுரத்தை புதிதாக அமைத்தும், தில்லைக் காளிக்கோவில், கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி ஆகியவற்றைக் அமைத்தும் பல சாதனைகளைச் செய்தவர்கள் காடவராயர்கள்.

புதுச்சேரி திருபுவனை ஏரி, ஒழுகரை ஏரி என பல இடங்களிலும் நீர்மேலாண்மை பணிகளை காடவராயர்கள் செய்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆறு சிறைவைக்கப்பட்டபோது, அணையை உடைத்து காவிரியை மீட்டவர்கள் காடவராயர்கள் ஆகும்

"கோப்பெருஞ்சிங்கன்"

காடவ அரசன் மணவாளப் பெருமான் விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனி அரசை உருவாக்கினார். கி.பி 1195-ல் சேந்தமங்கலத்தை தலை நகராகத் தோற்றுவித்தார் என்று அவரது 5-ம் ஆண்டு ஆட்சிக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

சேந்தமங்கலத்தில் வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினார் (இக்கோவில் குளத்தருகில் உள்ள கருங்கல் குதிரை சிலைகள், ஒவ்வொரு இடத்தில் தட்டும் போதும் வெவ்வேறு ஒலியை எழுப்பும் இசைக் குதிரைகள் ஆகும்.) இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் இவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன்.

காடவராய மன்னர்களில் புகழ்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன் ஆகும். கோப்பெருஞ்சிங்கன்,  சோழப் பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகள் உடையாழ்வார் அவர்களை தில்லை நடராஜர் கோயிலில்  திருமணம் செய்தான்.

இவன் புலவனாகவும் விளங்கினான்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் இடர்க்கரம்பை  ஊரிலுள்ள கல்வெட்டுகளும் இவனைக் குறிப்பிடுகின்றன. வாயலூர்ச் சாசனப் பாடல்கள் இவன் சோழனைச் சிறையிலிட்ட செய்திகளைக் கூறுகின்றன. இடர்க்கலம்பை, வயலூர் பாடல்கள் இவனால் பாடப்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இப்பாடல்களின் இறுதியில் 'சொக்கசீயன் ஆணை'  எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடல்
திறையிட்(டு) இருமின்கள் தெவ்வேந்திர் செம்பொன்
துறையிட்ட பூம்புகார் வேந்தன் – சிறைகிடந்த
கோட்டம் தனைநினைமின் கோப்பெருஞ்சிங் கன்கமல
நாட்டம் கடைசிவந்த நாள்

அதே கோப்பெருஞ்சிங்க காடவராயன், கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனனான சோழ அரசன் மூன்றாம் இராசராச சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார்.

கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

----------------- 
"தமிழை, தமிழ்நாட்டை காத்தவன் கோப்பெருஞ்சிங்கன்"

தமிழையும் தமிழ்நாட்டையும் தனது கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளான் கோப்பெருஞ்சிங்கன். வந்தவாசி அருகே உள்ள வாயலூர் கல்வெட்டு - 'பேணு செந்தமிழ் வாழப்பிறந்தவன் கோப்பெருஞ்சிங்கன் ' - என்கிறது.

வென்னிடாத போர்க் கன்னடர் வென்னிடப்
     பொருததுன் பெருஞ்சேனை
விளங்கு செம்பொனி னம்பலக் கூத்துநீ
     விரும்பிய தேவாரம்

பின்னி காவல அவனி நாராயண
     பேணு செந்தமிழ் வாழப்பிறந்த
காடவகோப் பெருஞ்சிங்க நின்
     பெருமை யார் புகழ்வாரேய்

(வெற்றிபெற முடியாத கன்னடரை வென்றவன், சிதம்பரம் நடராஜரை வழிபடுபவன், பேணு செந்தமிழ் வாழப்பிறந்தவன்).

"கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்"

குடதிசைக் கருநடர் தென்புலங் குறுகவும்
வடதிசைத் தெலுங்கர் வடக்கிருந் தழியவும்
போர்பல கடந்து பொருந்தா மன்னவர்

- என்கிறது திருவண்ணாமலை கல்வெட்டு.

(குடகுமலை திசையில் உள்ள கருநாடகரின் தென்புலத்தை குறைத்தவன், வடதிசையில் உள்ள தெலுங்கரை அங்கேயே அழியச் செய்தவன்)

செஞ்சி அண்ணமங்கலம் கல்வெட்டு "சொக்கப் பல்லவன் வாய் சொல்லும் வன்னிய மணாளன்" என கோபெருஞ்சிங்கனை புகழ்கிறது. 

----------------- 
"தி.வை. சதாசிவ பண்டாரத்தார்"

"காடவராய கோப்பெருஞ்சிங்கன், பல்லவர் வம்ச சிற்றரசனான சம்புவராயனுக்கும் உறவினனாக இருந்தான். மலையமான் சிற்றரசன் இராசராச சேதிராயனுக்கு தனது மகளை மணம் செய்து கொடுத்தான். சோழப்பேரரசின் இறுதிக்காலத்தில் சம்புவராயன், காடவராயன், வானகோவரையன், சேதிராயன் எல்லோரும் சோழப்பேரரசின் கீழே வலிமைபெற்ற தனி அரசர்கள் ஆகினர்" என்கிறார் வரலாற்று பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் (பிற்கால சோழர் சரித்திரம் II - பக்கம் 177).

இதனை உறுதி செய்யும் விதமாக தமிழகம் குறித்த ஆய்வுகளை வெளியிட்டுள்ள நோபுரு கரஷிமா, கி.பி. 1100 ஆம் ஆண்டுகளில் தொடங்கி, 1250 ஆம் ஆண்டுகளுக்குள் சம்புவராயர்கள், காடவராயர்கள், வானகோவரையர்கள், சேதிராயர்கள், கச்சிராயர்கள், நீலங்கரையர்கள் உள்ளிட்ட சிற்றரசர்கள் வலிமை படைத்தவர்களாக மாறியதை Ancient to Medieval: South Indian Society in Transition எனும் நூலில் உறுதி செய்கிறார். கூடவே, இவர்களில் பலரும் தம்மை 'பள்ளிகள்' என்று கூறிக்கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

----------------- 
"வரலாறு மறைக்கப்பட்டவர்கள்"

தமிழ்நாட்டு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டவர்கள் காடவராயர்கள். அவர்களது சந்ததியினரான கச்சிராயர்கள் இப்போதும் விருத்தாசலம் அருகில் உள்ள முகாசாபரூரிலும் கடலூரின் அருகில் உள்ள தியாகவல்லியிலும் வாழ்கின்றனர்.

ஆவணி திருவோண நட்சத்திரம், காடவராய மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனின்  பிறந்தநாள் ஆகும்.