இலங்கையின் கண்டி மாநகரின் வள்ளல் துரைராசா இராசகண்டியர்

இலங்கையின் கண்டி மாநகரின் வள்ளல் துரைராசா இராசகண்டியர்

இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் திருக்கண்டியூர் இளவரசன் இராசகண்டியன். 

இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான். 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும். 

உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.

இத்தகைய பெருமை வாய்ந்த இராசகண்டியன் குடும்பத்தில்
இலங்கையின் கண்டி மாநகரின் வள்ளலும், முதன் முதலில் அயல் நாடுகளில் கள்ளர் மகாசபையை உருவாக்கிய துரைராசா இராசகண்டியர் பிறந்தார்.

தஞ்சை மாநில சிராங்குடி சிதம்பரம் இராசகண்டியர், அஞ்சலை அம்மாள் தம்பதியினருக்கு 5 செப்டெம்பர் 1905 இல் துரைராசர் பிறந்தார். இக் குடும்பம் மிகுந்த செல்வாக்குடன் அன்நாள் ஒருங்கினைந்த மலாயா,பர்மா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் பல தோட்டங்களையும், பண்ணைகளையும் கொண்ட குடும்பமாகும். திரு துரைராசர் இளமையில் தனது கல்வியை இலங்கையிலும், சட்ட மேற்படிப்பினை இங்கிலாந்து நாட்டிலும் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 

சிதம்பரம் இராசகண்டியர் துரைராசா அவர்களின் மூதாதரையர்கள்.

01. சுடலைமலை இராசகண்டியர்(1650) - பேச்சியம்மாள் வன்னியர் 

02. அப்பாவு இராசகண்டியர் (1665) - அழகாயீ அங்குராயர் 

03. பெத்தாண்டி இராசகண்டியர் (1682) - செவந்தி சாளுவர் 

04. மலையாண்டி இராசகண்டியர் (1701) - கருப்பாயம்மாள் கிழாமுடையார் 

05. முத்தாண்டி இராசகண்டியர் (1721) - அகிலாயீ காடுவெட்டியார் 

06. சின்னத்தம்பி இராசகண்டியர் (1743) - வள்ளி சாளுவர் 

07. அய்யாக்கன்னு இராசகண்டியர் ( 1760)- முத்தாயம்மாள் வாண்டையார் 

08. மருதாண்டி இராசகண்டியர் (1780) - அழகியம்மாள் அங்குராயர் 

09. சந்தனம் இராசகண்டியர் 1803)  - வெள்ளையம்மாள் காலிங்கராயர் 

10. பெத்தையா இராசகண்டியர்(1820) - மீனாச்சி விஜயதேவர் 

11. தொப்பையா இராசகண்டியர் (1841) - இருளாயீ ராசபிரியர் 

12. வடமலை இராசகண்டியர் (1857) - காமாச்சி தெங்கொண்டார் 

13. சிதம்பரம் இராசகண்டியர் (1875) - அஞ்சலையம்மாள் தஞ்சிராயர் 

14. துரைராஜா இராசகண்டியர் (5/09/1905)- சம்பூரனத்தம்மாள் கருப்பூண்டார்

முதன் முதலில் அயல் நாடுகளில் கள்ளர் மகாசபையை உருவாக்கியவரும் இவரே. 1942ல் கள்ளர் மகா சபையை உருவாக்கி இறப்பு வரை நிர்வகித்த பெருமை இவரை சாரும். கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 1958ல் கள்ளர் மகாசபை 903 தஞ்சை கள்ளர்களை அங்கத்தினர்களாக கொண்டு செயல்பட்டதாக இலங்கையில் கண்டி மாநகர அரசுப் பதிவகத்தில் பதிவாகியுள்ளது. 1967ம் ஆண்டு அறிக்கையின் படி கள்ளர் மகாசபை 1643 அங்கத்தினர்களை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றது. 

மேலும் 1942 முதல் 1967 வரை தொடர்ந்து 26 ஆண்டுகள் 

திரு துரைராச கண்டியர் (கண்டி) தலைவராகவும், 

திரு சுப்பையா விஜயதேவர் (வத்துகாமம்) தொடர்ந்து 23ஆண்டுகள் செயளாளராகவும், 

கோவிந்தசாமி கங்கைநாட்டார் (கெங்காலை) 19 ஆண்டுகள் பொருளாளராகவும் செயல்புரிந்தமையும், 

திரு கோபால் ராஜாளியார்(அம்பிட்டி), 

திரு வேதமுத்து தெங்கொண்டார் (கலகா),

திரு சௌமியமூர்த்தி தொண்டைமான்(ரம்பொடை), 

ரத்தினம் கிளாமுடையார்(கொழும்பு),

ராஜமுத்தையா காலிங்கராயர்(மடுல்களை), 

வேலு சாளுவர்(ப்ண்டாரவளை), 

நாரயணசாமி தஞ்சைராயர்(உடுவரை) 

போண்றோர் ஆயுல் கால செயல் உருப்பினர்களாக இருந்தமையயும் அரசுப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.

திரு துரைராச கண்டியர் முற்போக்கு சிந்தனையாளராகவும் பல்வேறு உதவிகளையும் பல்வேறு மக்களுக்கு செய்தமையால் 1955ல் இலங்கை அர்சு இவருக்கு சமாதான நீதிமான் (ஜெ.பி.யு.எம்) என்ற கௌரவ பட்டத்தினை வழங்கியுள்ளது. இப்பட்டத்தினை பெற்ற முதல் தமிழர் இவராவார். 

இவர் இலங்கையில் இருப்பிடமாக கொண்ட மல்பானை என்னுமிடத்தில் முதல் கூட்டுரவு பண்டகசாலை மையத்தை 1956ல் உருவாக்கி பெருமை படைத்துள்ளார். 

கிருத்துவ மிஷனரி மூலம் தமில் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக ராஜவலை மெதடிஸ்ட் மிஷன் என்ற பெயரில் பள்ளி ஒன்றினையும் 1952ல் ஆரம்பித்து தந்து தனது சார்பாக 10 ஏக்கர் நிலத்தையும் பள்ளிக்கு வழங்கியுள்ளார். 

இப் பள்ளி தற்போது அரசுடமையாக்கப்பட்டு 1200 தமிழ் மாணவர்கள் பயிலும் கல்விக்கூடமாக இருந்துவருகிறது. 1969ம் வருடம் வரையிலும் கண்டியரே பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராகவும் இப் பள்ளியில் செயல் பட்டுள்ளார்.

மல்பானை புத்த விகாரையில் தமிழ் தெய்வங்களுக்கு முருகன் மற்றும் அம்மன் கோவில்களையும் கட்டியுள்ளார். 

கிராம மக்கள் பயன்பாட்டிற்காக 14 கிணறுகளையும் அமைத்து குடிநீர் தேவைகளையும் பூர்த்திசெய்துள்ளார். மேலும் 1951 முதல் தனது இறப்பு வரை கதிர்காமத்தில் தெய்வாணை அம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில்,சந்தனமலை கோவில், கதிரைமலை கோவில், செல்வக்கதிர்காமக் கோவில் அனைத்திற்க்கும் அறங்காவலராகவும்,கண்டி பிள்ளையார் கோவில் அறங்காவலராகவும் பணியாற்றியுள்ளார். 

கதிர்காமத்தில் பக்தர்கள் தங்கும் வசதிக்காக 30 அறைகள், நூலகம், உணவு அளிக்கும் அண்ணதானகூடம் உற்பட்ட தெய்வானை அம்மன் மடத்தையும் கட்டி நிர்வகித்த பெருமையும் கொண்டார். இவரை கதிர்காமக் கண்டியர் என்றே பலரும் அழைப்பர். 

இவர் 24 டிசம்பர் மாதம் 1970ல் இயற்கை எய்தினார்